Batticaloa
Kavalan
Batti Town
இணையங்கள்
tamilan
Comedy
Video Song
Seiten
செப்டம்பர் 23 ஆம் திகதி பூமியை நோக்கி வரும் புதிய அச்சுறுத்தல்: நாசா எச்சரிக்கை(வீடியோ இணைப்பு). நம்பலாமா ??.
டெப்ரிஸ் எனப்படும் குறித்த விண்கலத்தின் நிறை 6-7 டொன்கள் ஆகும். இதனை நாசா விஞ்ஞானிகள் தற்போது உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச் செயற்கைக்கோளானது எதிர்வரும் 23ஆம் திகதியளவில் பூமியில் விழலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இக்கோளானது பூமியை வந்தடையும் போது 1006 துண்டுகளாக உடையுமெனவும் இவற்றில் 26 துண்டுகள் மட்டுமே பூமியில் விழுமெனவும் நாசா விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு உடையும் துண்டுகளில் அதிகூடிய துண்டொன்றின் நிறை 350 பவுண்ட்கள் எனவும் இவை பூமியில் மனிதரொருவரை மோதுவதற்கான சாத்தியம் 3200 க்கு 1 என அவர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பில் மேலதிக தகவல்களை நாசா வரும் நாட்களில் வழங்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இது எப்பகுதியில் விழுமென நாசா விஞ்ஞானிகளால் கூட உறுதியாகக் கூற முடியாது.
அண்டார்டிகாவைத் தவிர பூமியின் எப்பகுதியிலும் இது விழலாம் என்பது குறிப்பிடத்தக்கது
இரண்டு சூரியன்களைக் கொண்ட கோள்
இதேவேளை இரண்டு சூரியன்களை, ஒரு கோள் சுற்றி வருவதை, அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர்.
கெப்ளர்-16பி எனப் பெயரிடப்பட்டுள்ள இக் கோளானது பூமியிலிருந்து 200 ஒளிஆண்டு தொலைவில் அமைந்துள்ளது
அனைத்து Battitamil வாசகர்களுக்கும் இனிய தமிழ்/ சிங்கள புத்தாண்டு வாழ்த்துக்கள்
புது பானையில்....
புதிய எண்ணங்கள்
புதிய நண்பர்கள்
புதிய முயற்சிகள்
புதிய நம்பிக்கைகள்
புதிய திட்டங்களை சேர்த்து
சோர்விலா செயல்கள்
என்னும் தீயை மூட்டி
பொங்கட்டும் புது வாழ்வு ...!
புத்தாண்டு – இது புவியின் வளற்சியில் இன்னும் ஓர் ஆண்டு.
தினம் தினம் வரும் நாள்போல் இல்லாமல், இனிவரும் நாளெல்லம்
இன்பமாய் இருக்கட்டும். திக்கி திக்கி பேசும் குழந்தை மொழிபோல,
தித்திப்பாய் இருக்கட்டும் திகட்டாமல் இருக்கட்டும்.
யாரோ,கோடிகோடியாச் சேர்த்த பணமெல்லம்
தெருக்கோடியில் வாழும் மக்களுக்கு போய்ச்சேரட்டும்.
சீரியல் பார்த்து பார்த்து அழுதுசிவந்த முகம், இன்று ஒருநாளாவது சிரிக்கட்டும். சாலையில் தேங்கி நின்ற தண்ணீரில்
முகம் பார்த்த நிலை மாறி – வழுக்கும் கண்ணாடி சாலையில் முகம்பார்க்கும்
நிலை வரட்டும். சகலரும், சண்டை, சச்சரவு களைந்து,
மதங்களையெல்லம் மறந்து, மனித உணர்வோடு மகிழ்வாய் இருக்கட்டும்.
தரணி வாழ் அனைவரும் எதிர்காலம் அது உங்கள்
எண்ணம்போல் அமைய எனது“புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்,,,
உலகம் அழியத்தான் போகுதோ??
கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட ஜப்பானியப் நில அதிர்வைத் தொடர்ந்து புவியின் சுழற்சி வேகம் 1.6 மைக்ரோ செகண்ட்ஸ் அதிகரித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
அழிக்க முடியாத கோப்புகளை உருவாக்க


இத்தகைய கோப்புக்களை(Undeleteable Folders) DOS Command Prompt மூலமாக மட்டும் தான் உருவாக்க முடியும். அத்தகைய கோப்புக்களை சாதாரணமாக எவரும் அழிக்க முடியாது. அவ்வாறு அழிப்பதாயின் DOS Command Prompt வழியே சென்று தான் அழிக்கமுடியும்.
இதோ அதற்கான வழிமுறைகள்:
1. முதலில் DOS Command Prompt ஐ திறவுங்கள். இதற்கு Start>Run>(type) "cmd".
2. பின்னர் கோப்பு(folder) சேமிக்க வேண்டிய இடத்தினை(C: or D:) தெரிவு செய்த பின்னர் Command Prompt இல் "mdaux" என்றவாறு தட்டச்சு செய்யுங்கள்.(கோப்புக்களை உருவாக்க நீங்கள்(aux,lpt1,con,lpt5) போன்ற பெயர்களை மட்டுமே பாவிக்க முடியும்).
3. தற்பொழுது aux என்ற கோப்பானது உங்கள் கணனியில் நீங்கள் தெரிவு செய்த இடத்தில்(directory: C: or D:) சேமிக்கப்பட்டிருக்கும்.
4. தற்பொழுது அந்த கோப்பினை அழிக்க முயற்சி செய்து பாருங்கள். அது கீழே உள்ளவாறான தகவலை உங்களுக்கு தரும்.
5. கோப்பை அழிக்க வேண்டுமாயின் rdaux என்றவாறு தட்டச்சு செய்து அழிக்கலாம்.
அனைவருக்கும் காதலர்தின நல்வாழ்த்துக்கள்

உன்னையும் என்னையும் பெட்ட்றது காதல்
உலக பந்தின் உயிர்தான் காதல்
ஊசி மோனையின் காதுக்குள்ளே
ஓட்டங்களை நுழைப்பது காதல்
காதின் ஓரம் நரைத்தும்கூட
இளமை போட்டு இழுப்பது காதல்.
நிலவுக்கு புன்னகை தந்தது காதல்
உலகுக்கு பூக்கள் தந்தது காதல்
யாருக்கும் தெரியாமல்
ஊரெல்லாம் அறியாமல்
மனசுக்குள் மழை தூவும் காதல்
காதலை நினைக்கும் நேரம் ....
கவலைகள் மறக்கும் நேரம் ...
இதயத்தை பூட்டி வைக்காமல் ...
இமைகளை மட்டும் பூட்டி வைப்போம் …
விடியும் வரை .....
அனைவருக்கும் காதலர்தின நல்வாழ்த்துக்கள்
Happy Valentines day. Battitamil.
ஏப்ரல் 13, 2036 இல் பூமிக்கு அழிவா?: விஞ்ஞானிகள் எச்சரிக்கை (வீடியோ இணைப்பு)
அப்போஃபிஸ்' என்ற சிறிய கோளானது பூமிக்கு பாரிய அச்சுறுத்தல் எனவும் இக் கோளானது எதிர்வரும் 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி பூமியுடன் மோதலாம் எனவும் ரஸ்ய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சிலவேளை மத்திய கிழக்கு,தென் அமெரிக்கா அல்லது ஆபிரிக்காவின் மேற்கு கரையோரப்பகுதியில் மோதலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது பூமியோடு மோதினால் இதன் சக்தி வெளிப்பாடு சுமார் 100 அணுகுண்டுகளுக்குச் சமனாகவிருக்குமென நாசா தெரிவித்துள்ளது.
எனினும் இது 2036 ஆம் ஆண்டு மோதுவதற்கான வாய்ப்பு 45,000 இற்கு 1 என்ற நிகழ்தகவு எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனாலும் நாம் எத்தகையதொரு சந்தர்ப்பத்திற்கும் முகங்கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அக் கோள் பூமியுடன் மோதுவதனை தவிர்ப்பதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மாரடைப்பு ஏற்படாமல் தடுத்துக் கொள்வது எப்படி?

புகை பிடித்தல், குடிப்பழக்கம், மன அழுத்தம், அதிக கொழுப்புள்ள உணவுகளைச் சாப்பிடுதல், தவறான வாழ்க்கை முறை, அதிக ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் குறைத்தால் ரத்த நாளங்கள் சீராகச் செயல்பட ஆரம்பிக்கும்.
தினமும் உடற்பயிற்சி மிகவும் அவசியம். நல்ல உணவு, முறையான உடற்பயிற்சி ஆகியவை ரத்த நாளங்கள் பழுதடையாமல் செயல்பட உறுதுணையாக இருக்கும்.
ஆரோக்கியமான வாழக்கை முறை:
பொதுவாக 50 வயதுக்கும் மேற்பட்ட ஆண்களுக்கும் 70 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கும் ரத்தக் குழாய்களில் அடைப்பு அதிகமாக ஏற்படுகிறது. நல்ல பழக்கவழக்கம் உடையவர்களுக்கும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் ரத்த நாளங்கள் நன்றாகச் செயல்படும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.
சீரான உணவு, சீரான உடற்பயிற்சி, சரியான மருந்து இருந்தால் ரத்த ஓட்டத்தை தமனி, சிரைகளில் சீர்படுத்தி இயத்தை வலுப்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும்.
மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும்:
ஒரு குறிப்பிட்ட மருந்தின் பெயரையும், அதை ஏன் சாப்பிடுகிறோம் என்பதையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மருந்துகளை குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
மருந்தைச் சாப்பிட மறந்துவிட்டால் அதற்காக விடுபட்ட மருந்தை அடுத்த வேளை சேர்த்துச் சாப்பிடக் கூடாது. பிற மருந்துகள் குறிப்பாக ஆஸ்பிரின், வைட்டமின் மாத்திரைகள் ஆகியவற்றை டாக்டரின் ஆலோசனைப்படி சாப்பிடவும்.
இதய நோயாளிகள் தங்களது மருந்துகளை மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டாம். அதேபோன்று அடுத்தவர்களின் மருந்துகளை இதய நோயாளிகள் வாங்கிச் சாப்பிட வேண்டாம். சில மருந்துகள் ஏற்கனவே சாப்பிடும் மாத்திரைகளுடன் ஒத்துப்போகாது. அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே, டாக்டரின் ஆலோசனையுடன் சாப்பிட வேண்டும். வெளியூர் செல்லும்போது தேவையான அளவு மருந்துகளை எடுத்துச் செல்லவும்.
ஏனெனில் உங்களுக்குத் தேவையான மருந்துகள் நீங்கள் போகும் நகரத்தில் கிடைக்காமல் போகலாம். குழந்தைகளுக்கு எட்டாதவாறு, சூரிய ஒளிபடாத இடத்தில் மருந்துகளைப் பாதுகாப்பாக வைக்கவும்.
மது வேண்டாம்:
டாக்டரிடம் செல்லும்போது அவர் அளித்த சீட்டை மறக்காமல் எடுத்துச் செல்லவும். மதுப்பழக்கம் இருந்தால், அது இதயநோயின் மருந்துகளை வேலை செய்யவிடாமல் பாதிப்பை ஏற்படுத்தும்.
Kavalan
Meine Blog-Liste
SURA

